Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாமியார் பலி: மருமகன் கைது

மாமியார் பலி: மருமகன் கைது

மாமியார் பலி: மருமகன் கைது

மாமியார் பலி: மருமகன் கைது

ADDED : மார் 16, 2025 07:20 AM


Google News
விருத்தாசலம்; வீட்டை இடித்த மருமகனை தடுக்கச் சென்ற மாமியார், டிராக்டரில் சிக்கி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டை அடுத்த கொக்காம்பாளையம் ராஜவேல் மகன் அருள்தாஸ்,37. இவரது மனைவி கீதாவை, நேற்று உறவினர்கள் சங்கர், ராஜசேகர் ஆகியோர் திட்டியுள்ளனர். மது போதையில் இருந்த அருள்தாஸ், டிராக்டரால் சங்கர் வீட்டின் முன்புற கதவை இடித்து தள்ளினார்.

இதை தடுக்கச் சென்ற அருள்தாசின் மாமியார் அஞ்சலை, 58, என்பவர் டிராக்டரில் சிக்கி, தலையில் பலத்த காயமடைந்தார். உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அஞ்சலை இறந்தார். ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, அருள்தாசை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us