ADDED : மார் 18, 2025 10:54 PM
நடுவீரப்பட்டு : வேலைக்கு சென்ற மகனை காணவில்லை என தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
நடுவீரப்பட்டை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகன்,51; இவர் கடந்த நவம்பர் மாதம் மலையனுாருக்கு கூலி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாய் வள்ளி அளித்த பகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து முருகனை தேடி வருகின்றனர்.