ADDED : பிப் 11, 2024 10:42 PM
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே பனங்கள்ளு வியாபாரியை, போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த சேந்திரக்கிள்ளை கிராமத்தில், பனங்கள்ளு விற்பதாக கிடைத்த தகவலின்பேரில், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பனங்கள்ளு விற்பனை செய்துக்கொண்டிருந்த அயன் குறிஞ்சிப்பாடி பாட்டை வீதியை சேர்ந்த மணிகண்டனை, 32; போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 லிட்டர் பனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து, பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.