/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரூ. 24 கோடியில் நவீன சுத்திகரிப்பு நிலையம்: விரைந்து முடிக்க விருதை மக்கள் எதிர்பார்ப்பு ரூ. 24 கோடியில் நவீன சுத்திகரிப்பு நிலையம்: விரைந்து முடிக்க விருதை மக்கள் எதிர்பார்ப்பு
ரூ. 24 கோடியில் நவீன சுத்திகரிப்பு நிலையம்: விரைந்து முடிக்க விருதை மக்கள் எதிர்பார்ப்பு
ரூ. 24 கோடியில் நவீன சுத்திகரிப்பு நிலையம்: விரைந்து முடிக்க விருதை மக்கள் எதிர்பார்ப்பு
ரூ. 24 கோடியில் நவீன சுத்திகரிப்பு நிலையம்: விரைந்து முடிக்க விருதை மக்கள் எதிர்பார்ப்பு

மணிமுக்தாறு புண்ணிய நதி
விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு கடந்த காலங்களில் மணிமுக்தாற்றில் நீராடிவிட்டு பக்தர்கள் சென்றதாக வரலாறு உள்ளது. 'காசியைவிட வீசம் பெருசு, விருத்தகாசி' என்ற ஆன்மிக பெயரும் உள்ளது. காசிக்கு சென்று கங்கையில் நீராடி பாவங்களை போக்குவதை விட, மணிமுக்தாற்றில் நீராடி, விருத்தகிரீஸ்வரரை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்பதே இதன் பொருள். இப்படியான புண்ணிய நதி, கழிவுநீர் சூழ்ந்து, முட்புதர்கள் மண்டி, மினி கூவம்போல காட்சியளிக்கிறது.
தடுப்பணை கட்ட அனுமதி இல்லை
வெள்ள காலங்களில் மட்டுமே மணிமுக்தாற்றில் நீர்வரத்து இருக்கும் நிலையில், கோடைகாலங்களில் வறண்டு நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்தது. இதனால் நகரில் ஆங்காங்கே ஆழ்குழாய் கிணறுகள் செயலிழந்து 2 முதல் 4 லட்சம் வரை புதிதாக போர்வெல் போடும் நிலைக்கு தள்ளப்பட்டது. தற்போது 200 முதல் 350 அடிக்கு கீழே போர்வெல் போடும் அவலம் ஏற்பட்டுள்ளது.
விருத்தாசலம் நகருக்கு என்.எல்.சி., உதவியது
விருத்தாசலம் நகர மக்களின் நலன் கருதி என்.எல்.சி., இந்தியா நிறுவனம் உதவ முன்வந்தது. அதன்படி, சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் 85 லட்சம் ரூபாயில் கழிவுநீரை சுத்திகரித்து, மணிமுக்தாற்றில் திருப்பி விடும் முயற்சி நடந்தது.
ரூ. 24 கோடி புதிய திட்டம்
நகராட்சியின் 33 வார்டுகளில் இருந்து மணிமுக்தாற்றில் வெளியேற்றப்படும் கழிவுநீரை முழுமையாக ராட்சத குழாய்கள் மூலமாக ஒரே இடத்தில் சுத்திகரித்து, மணிமுக்தாற்றில் விடும் திட்டம் குறித்து நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் தலைமையிலான நிர்வாகம் ஆய்வு நடத்தியது.