Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புதிய கல்விக் கொள்கை வேண்டாம் அமைச்சர் பொன்முடி பேச்சு

புதிய கல்விக் கொள்கை வேண்டாம் அமைச்சர் பொன்முடி பேச்சு

புதிய கல்விக் கொள்கை வேண்டாம் அமைச்சர் பொன்முடி பேச்சு

புதிய கல்விக் கொள்கை வேண்டாம் அமைச்சர் பொன்முடி பேச்சு

ADDED : மார் 17, 2025 08:59 AM


Google News
Latest Tamil News
விருத்தாசலம் : 'தமிழகத்திற்கு புதிய கல்விக் கொள்கை வேண்டாம்' என அமைச்சர் பொன்முடி பேசினார்.

மங்கலம்பேட்டையில், மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார்.

சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வடக்கு ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி, மங்கலம்பேட்டை பேரூராட்சி சேர்மன் சம்சாத் பாரி இப்ராஹிம் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய செயலர் வேல்முருகன் வரவேற்றார்.

மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பெருநற்கிள்ளி, விருத்தாசலம் தொகுதி பொறுப்பாளர் சபா சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கணேஷ்குமார், வழக்கறிஞரணி மாவட்ட தலைவர் பாரி இப்ராஹிம், அவை தலைவர் முஹம்மது யூசுப், மாவட்ட பிரதிநிதிகள் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

மங்கலம்பேட்டை பேரூர் செயலர் செல்வம் நன்றி கூறினார்.

கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், 'நமது தாய்மொழியை கண்டிப்பாக படிக்க வேண்டும். அதேபோல் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்கிற நமது பிள்ளைகள் அங்குள்ள மக்களோடு பழகுவதற்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலம் படித்திருந்தால் நாம் எந்த நாட்டிற்கும் சென்று வர முடியும்.

புதிய கல்விக் கொள்கையை நடைமுறைபடுத்தினால், 8ம் வகுப்பைத் தாண்டி மாணவர்கள் படிக்க முடியாத நிலை ஏற்படும். அதனால்தான் புதிய கல்விக் கொள்கை வேண்டாம் என்கிறோம்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us