/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 3,177 கோவில்களுக்கு கும்பாபிேஷகம் அமைச்சர் கணேசன் பெருமிதம் 3,177 கோவில்களுக்கு கும்பாபிேஷகம் அமைச்சர் கணேசன் பெருமிதம்
3,177 கோவில்களுக்கு கும்பாபிேஷகம் அமைச்சர் கணேசன் பெருமிதம்
3,177 கோவில்களுக்கு கும்பாபிேஷகம் அமைச்சர் கணேசன் பெருமிதம்
3,177 கோவில்களுக்கு கும்பாபிேஷகம் அமைச்சர் கணேசன் பெருமிதம்
ADDED : செப் 23, 2025 07:35 AM

விருத்தாசலம் :விருத்தாசலம் வானொலி திடலில், கடலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர், அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தண்டபாணி வரவேற்றார். சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., துரைசாமி, மாவட்ட பொருளாளர் தண்டபாணி, துணை செயலாளர் தணிகைசெல்வம், நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, வெங்கட்ராமன், கனககோவிந்தசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன் முன்னிலை வகித்தனர்.
மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் பத்மபிரியா, ஓரணியில் தமிழ்நாடு தீர்மானங்கள் குறித்து பேசினார்.
அமைச்சர் கணேசன் பேசுகையில், 'தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை 1.15 கோடி பேருக்கு வழங்கப்படுகிறது. 4 ஆண்டுகளில் விடியல் பயணம் மூலம் 730 கோடி பெண்கள் பயணித்துள்ளனர்.
பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தில் 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பயனடைகின்றனர். இதன் மூலம் 9.2 சதவீதம் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 14 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை இலக்க வளர்ச்சி பெற்றுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி .07 சதவீதம் மட்டுமே. ஆனால், தி.மு.க., ஆட்சியில் 11.19 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்தியாவிலேயே அதிக தொழிலாளர்களை கொண்டதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தி.மு.க., ஆட்சியில் 70 ஆயிரத்து 400 கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 3,177 கோவில்களுக்கு கும்பாபிேஷகம் நடந்துள்ளது.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அனைத்து தரப்பினரும் தி.மு.க.,வை 200 தொகுதிகளில் வெற்றி பெற வைக்க வேண்டும்' என்றார். தொடர்ந்து, ஓரணியில் தமிழ்நாடு தீர்மானங்களை வலியுறுத்தி, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
நகர துணை செயலாளர் ராமு நன்றி கூறினார்.