Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மனநலம் பாதித்த பெண் ரயில் மோதி பலி

மனநலம் பாதித்த பெண் ரயில் மோதி பலி

மனநலம் பாதித்த பெண் ரயில் மோதி பலி

மனநலம் பாதித்த பெண் ரயில் மோதி பலி

ADDED : செப் 21, 2025 06:18 AM


Google News
விருத்தாசலம்: செந்துறை அருகே ரயில்பாதையை கடக்க முயன்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண், எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இறந்தார்.

அரியலுார் மாவட்டம் செந்துறை அடுத்த வஞ்சிணாபுரம், இந்திரா நகரை சேர்ந்தவர் பெத்தபெருமாள், 54; இவரது மனைவி சிந்தாமணி, 49; இவர் கடந்த ஆறு மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்தார். நேற்று முன்தினம் செந்துறை ரயில்வே ஜங்ஷன் அருகே உள்ள ரயில்பாதையை கடக்க முயன்றார்.

அப்போது, எதிர்பாராத விதமாக சென்னை - மதுரை சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியது. இதில், தலை துண்டாகி, சம்பவ இடத்திலேயே சிந்தாமணி இறந்தார்.

தகவலறிந்து சென்ற விருத்தாசலம் இருப்பு பாதை போலீசார், சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us