ADDED : ஜூன் 06, 2025 06:38 AM

மந்தாரக்குப்பம்; கெங்கைகொண்டான் பேரூராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக அரசின் விழுதுகள் திட்டத்தின் கீழ் குளிரூட்டப்பட்ட பேருந்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் இருப்பிடத்திற்கே சென்று மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
இதில் கேட்டல் மற்றும் பேச்சு, பார்வை உளவியல், இயன்முறை மருத்துவ சிகிச்சைகள் குறித்த இயன்முறை மருத்துவர் திருவாசகம் சிகிச்சை மேற்கொண்டார்.
மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சிறப்பு மருத்துவ முகாம் மேற்கொள்வதாகவும், மருத்துவமனைக்கு வர இயலாதவர்களுக்கு இத்திட்டம் பயனுள்ளதாக அமையும் என திட்ட மைய மேலாளர் ராஜசேகரன் தெரிவித்தார்.
பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ், மருத்துவ உதவியாளர் பெலாரேடிசூசை உட்பட பலர் பங்கேற்றனர்