/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அண்ணாமலைநகரில் அதிகபட்சமாக 53 மி.மீ., மழைஅண்ணாமலைநகரில் அதிகபட்சமாக 53 மி.மீ., மழை
அண்ணாமலைநகரில் அதிகபட்சமாக 53 மி.மீ., மழை
அண்ணாமலைநகரில் அதிகபட்சமாக 53 மி.மீ., மழை
அண்ணாமலைநகரில் அதிகபட்சமாக 53 மி.மீ., மழை
ADDED : ஜன 08, 2024 05:53 AM
கடலுார்: தெற்கு வங்கக்கடல், அதனையொட்டிய நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதியில் காற்று சுழற்சி நீடிக்கிறது.இதனால்தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்தது.
அதன்படி நேற்று கடலுார் மாவட்டத்தில் பரவலான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 8.30 மணிமுதல் நேற்று காலை 8.30 மணி வரை பெய்த மழையளவு வருமாறு:
அண்ணாமலைநகர் 53.8 மி.மீ., சிதம்பரம்41, பரங்கிப்பேட்டை 31, காட்டுமன்னார்கோவில் 27, லால்பேட்டை 14, வானமாதேவி 3, சேத்தியாதோப்பு 12.2, புவனகிரி, கலெக்டர் அலுவலகம் 9.6, கடலுார் 8, கொத்தவாச்சேரி 7, பண்ருட்டி , குறிஞ்சிப்பாடி 3மி.மீ., பெய்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக அண்ணாமலை நகரில் 53 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.