Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/10 நாட்களில் திருமணம்; ஐ.டி., ஊழியர் விபத்தில் பலி

10 நாட்களில் திருமணம்; ஐ.டி., ஊழியர் விபத்தில் பலி

10 நாட்களில் திருமணம்; ஐ.டி., ஊழியர் விபத்தில் பலி

10 நாட்களில் திருமணம்; ஐ.டி., ஊழியர் விபத்தில் பலி

ADDED : ஜன 13, 2024 07:36 AM


Google News
Latest Tamil News
செஞ்சி : செஞ்சி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் 10 நாளில் திருமணம் நடைபெற இருந்த வாலிபர் இறந்தார்.

திருவண்ணாமலை, வேங்கிகால் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர் மகன் செல்வகுமார்,30; பி.இ., பட்டதாரி. சென்னையில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு வரும் 21ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து தனது யமஹா பைக்கில் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தார்.

நள்ளிரவு 12:30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராம வங்கி அருகே சென்றபோது, எதிரே திருவண்ணாமலையில் இருந்து செஞ்சி நோக்கி வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி செல்வகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். திருமணத்திற்கு சில தினங்களே உள்ள நிலையில் செல்வகுமார் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us