ADDED : மே 15, 2025 11:40 PM
விருத்தாசலம்: நண்பரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம், புதுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேசன், 33; சுரேஷ்,41; நண்பர்கள். கடந்த 12ம் தேதி இருவரும் ரயில்வே ஜங்ஷன் பகுதியில் உள்ள ஓட்டலில் டிபன் வாங்க சென்றனர்.
அங்கு இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுரேஷ், வெங்கடேசனை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதில், படுகாயமடைந்த வெங்கடேசன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
அங்கு அவரது தலையில் 17 தையல் போடப்பட்டது.
புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, சுரேஷை கைது செய்தனர்.


