ADDED : செப் 18, 2025 11:15 PM
விருத்தாசலம்; விருத்தாசலத்தில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் பூந்தோட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த அரசன், 56; என்பவர், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடன், போலீசார் வழக்கு பதிந்து அரசனை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.