சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது
சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது
சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது
ADDED : ஜன 05, 2024 06:28 AM

கடலுார் : கடலுார் சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டார்.
கடலுார், சிப்காட்டை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 43; இவர், பெரியகாரைக்காடு பைபாஸ் சாலையில் பைக்கில் 150 லிட்டர் சாராயம் கடத்தி வந்தபோது, கடலுார் மதுவிலக்கு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது ஏற்கனவே 6 சாராய வழக்குகள் உள்ளது.
இவரது செயலை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையை ஏற்று, ராமமூர்த்தியை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார்.
அதன்பேரில் ராமமூர்த்தி, கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.