ADDED : செப் 12, 2025 05:11 AM
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு பூர்த்தி விழா நடந்தது.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம், பழையபாளையம் தெரு செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிேஷக ஆண்டு பூர்த்தி விழாவையொட்டி நேற்று முன்தினம் ேஹாம வேள்விகள் நடந்தது.
தொடர்ந்து, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. யாகவேள்வியில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து, விநாயகருக்கு கலச அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, மகா தீபாரா தனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.