ADDED : அக் 03, 2025 01:51 AM

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியில் விஜயதசமியையொட்டி மாணவர் சேர்க்கை நடந்தது.
பள்ளி தாளாளர் குமார் தலைமை தாங்கினார். இணை தாளாளர் ரூபியால் ராணி, நிர்வாக இயக்குநர் அருண், தலைமை நிர்வாகி லியோனா அருண் முன்னிலை வகித்து, மிஷல் என்ற குழந்தைக்கு அ...எழுதி கல்வியை துவக்கி வைத்தனர். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் லியோ பெஸ்கி ராவ் செய்திருந்தார். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


