ADDED : ஜன 12, 2024 03:56 AM

புவனகிரி: கீரப்பாளையம் ஒன்றியக்குழுக்கூட்டம் நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு சேர்மன் கனிமொழி தேவதாஸ்படையாண்டவர் தலைமை தாங்கினார்.
ஆணையாளர் நிர்வாகம் ரமேஷ் வரவேற்றார். துணைச் சேர்மன் காஷ்மீர்ச்செல்வி வினாயகம், ஆணையாளர்கள் பாலக்கிருஷ்ணன், இப்ராகிம் முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர். இளநிலை உதவியாளர் பாலு திட்ட அறிக்கை வாசித்தார்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள், செலவினங்கள் மற்றும் மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்து மன்றத்தில் விவாதித்தனர். கணக்காளர் ஸ்ரீராம் நன்றி கூறினார்.