ADDED : மே 15, 2025 11:48 PM
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 13ம் தேதி முதல் ஜமாபந்தி நடந்து வருகிறது. மூன்றாம் நாளான நேற்று கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஜமாபந்தியை ஆய்வு செய்து, மனுக்கள் பெற்றார்.
தாசில்தார் இளஞ்சூரியன், ஜமாபந்தி மேலாளர் ராமதாஸ், நில அளவை பதிவேடு உதவி இயக்குனர் ஆனந்தன், தலைமையிடத்து துணை தாசில்தார் சிவகண்டன், ஆர்.ஐ.பிரேம்குமார் உடனிருந்தனர்.


