ADDED : ஜூன் 24, 2025 07:49 AM
வடலுார் : கூலி தொழிலாளி மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது
வடலுார் அடுத்த கல்லுக்குழி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்,51; இவர் கடந்த 14ம் தேதி, கூலி வேலைக்கு செல்வதாக தனது மனைவியிடம் தெரிவித்து சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் இவரை பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மனைவி கசப்பாயி அளித்த புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து பழனிவேலை தேடி வருகின்றனர்.