/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மனைவி மீது கொதிக்கும் சாம்பார் ஊற்றிய கணவர் கைதுமனைவி மீது கொதிக்கும் சாம்பார் ஊற்றிய கணவர் கைது
மனைவி மீது கொதிக்கும் சாம்பார் ஊற்றிய கணவர் கைது
மனைவி மீது கொதிக்கும் சாம்பார் ஊற்றிய கணவர் கைது
மனைவி மீது கொதிக்கும் சாம்பார் ஊற்றிய கணவர் கைது
ADDED : ஜன 03, 2024 06:51 AM
விருத்தாசலம் : மனைவி மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் தரும ராஜா, 33; இவரது மனைவி கல்பனா, 29; திருமணமாகி 11 ஆண்டாகிறது. இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
தருமராஜா வேலைக்கு செல்லாமல், தினமும் குடித்துவிட்டு, மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மீண்டும் இவர்களுக்குள் தக ராறு ஏற்பட்டது. அப்போது, தர்மராஜா வீட்டில் இருந்த சூடான சாம் பாரை கல்பனா மீது ஊற்றினார்.
இதில் படுகாயமடைந்த கல்பனா விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, தருமராஜாவை கைது செய்தனர்.