Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாணவிக்கு தொந்தரவு; தொழிலாளிக்கு 'போக்சோ'

மாணவிக்கு தொந்தரவு; தொழிலாளிக்கு 'போக்சோ'

மாணவிக்கு தொந்தரவு; தொழிலாளிக்கு 'போக்சோ'

மாணவிக்கு தொந்தரவு; தொழிலாளிக்கு 'போக்சோ'

ADDED : ஜன 09, 2024 06:54 AM


Google News
கடலுார் : கல்லுாரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளியை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கடலுார், பாதிரிக்குப்பத்தைச் சேர்ந்தவர் மோகன் மகன் தனுஷ்குமார், 20; தச்சு வேலை செய்து வருகிறார். இவர், இவர், 17 வயது கல்லுாரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தார்.

இதையறிந்த மாணவியின் தந்தை, தனுஷ்குமாரை அழைத்து கண்டித்தார். இருப்பினும் அவர் மீண்டும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தார்.

இதுகுறித்து மாணவியின் தந்தை கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார், 'போக்சோ' பிரிவில் வழக்குப் பதிந்து தனுஷ்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us