ADDED : ஜன 08, 2024 05:45 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் குட்கா விற்ற பெட்டிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் காந்தி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் விருத் தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, செல்வராஜ் நகரை சேர்ந்த முஹம்மத் முஸ்தபா, 28, என்பவர் தனது பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, முஹம்மத் முஸ்தபாவை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.