Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கிராம சபை கூட்டம் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கிராம சபை கூட்டம் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கிராம சபை கூட்டம் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கிராம சபை கூட்டம் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ADDED : மார் 22, 2025 07:18 AM


Google News
கடலுார்; நாளை நடக்க இருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

கடலுார் மாவட்டத்தில் நாளை 23ம் தேதி கிராம சபை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால் 29ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டு அன்று காலை 11:00 மணிக்கு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடக்கிறது.

கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றியும், மதசார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தாமல் பொதுவான இடங்களில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்கும் வகையில் நடத்த வேண்டும்.

கிராம சபை கூட்டம் நடைபெறும் இடம், நேரம் குறித்து முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி நடத்தும்படி அனைத்து தனி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம சபை கூட்டத்தில் கருப்பொருள், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us