/உள்ளூர் செய்திகள்/கடலூர்/புவனகிரி பகுதியில் அரசு கல்லூரி துவங்கவேண்டும்: ஊழல் எதிர்ப்பு இயக்கம், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை புவனகிரி பகுதியில் அரசு கல்லூரி துவங்கவேண்டும்: ஊழல் எதிர்ப்பு இயக்கம், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
புவனகிரி பகுதியில் அரசு கல்லூரி துவங்கவேண்டும்: ஊழல் எதிர்ப்பு இயக்கம், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
புவனகிரி பகுதியில் அரசு கல்லூரி துவங்கவேண்டும்: ஊழல் எதிர்ப்பு இயக்கம், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
புவனகிரி பகுதியில் அரசு கல்லூரி துவங்கவேண்டும்: ஊழல் எதிர்ப்பு இயக்கம், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ADDED : பிப் 24, 2024 06:23 AM

புவனகிரி : புவனகிரியில் அரசு கல்லுாரி அமைக்க வேண்டும் என ஊழல் எதிர்ப்பு இயக்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
புவுனகிரி வளர்ந்து வரும் நகரமாகவும், பேரூராட்சி, ஒன்றியம், தாலுகா மற்றும் சட்டசபை தொகுதியின் தலைமையிடமாகவும், விவசாயமே முக்கியத் தொழிலாகவும் உள்ளது. முற்றிலும் கிராமங்களை உள்ளடக்கிய இப்பகுதியில் அரசு சார்ந்த உயர் கல்வி, தொழில் கல்விக்கான நிறுவனங்கள் ஏதும் இல்லை.
மேலும், இப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், தொழிலாளிகள் பிள்ளைகள் உயர்கல்விக்கு சிதம்பரம், கடலுார், விருத்தாசலம் பகுதிக்கு செல்ல இரு பஸ் பிடிக்க வேண்டியதால், பாதுகாப்பு கருதி பல பெண்களின் உயர்கல்வி கனவாகவே அமைந்துள்ளது. இதனால் புவனகிரி சுற்றுபகுதி கிராமங்களில் உள்ளவர்கள் அதிக பட்சம் பிளஸ் 2 வகுப்பிற்கு மேல் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அருகில் உள்ள சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அரசு கல்லுாரி, தொழில் நுட்படக்கல்லுாரிகள் உள்ளது. இதே போன்று காட்டுமன்னார்கோவிலில் அரசு உறுப்புக் கல்லுாரி, அரசு தொழில் நுட்பக் கல்லுாரியும் இயங்கி வருகிறது.
ஆனால் புவனகிரி தாலுகா பகுதியில் எந்த கல்லுாரியும் இல்லை. எனவே புவனகிரி தாலுகா பகுதியில் அரசு பாரபட்சமில்லாமல் அரசு கல்லுாரியுடன் தொழில் நுட்பக்கல்லுாரிகளும் துவக்க வேண்டும்.
ஊழல் எதிர்ப்பு இயக்க மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் கூறுகையில்: புவனகிரி தாலுகாவில் கிராமங்களைச் சேர்ந்த விவசாய தொழிலாளர்களின் பிள்ளைகள், குறிப்பாக பெண் பிள்ளைகளின் உயர்கல்வி பெருமளவில் தொடரமுடியாமல் தடை படுகிறது. பெண் பிள்ளைகள் வெளியூர் சென்று உயர்கல்வியை தொடர முடியாமலும், பாதுகாப்பு கருதியும் உயர்க்கல்வி படிக்க முடியாமல் போகிறது.
இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க புவனகிரியில் உயர்க் கல்வித் துறையினர் நடவடிக்கை எடுத்து கலைக்கல்லுாரி மற்றும் தொழில் நுட்பக்கல்லுாரி அமைக்க வேண்டும்.
ஊழல் எதிர்ப்பு இயக்க புவனகிரி தாலுகா செயலாளர் பன்னீர்செல்வம் கூறுகையில்; புவனகிரி தாலுாவில் அரசு கல்லுாரி மற்றும் தொழிற்கல்வி இல்லாததால் இங்குள்ள மாணவ, மாணவிகள் மேல்படிப்பிற்கு செல்ல முடியாமல் கூலித்தொழிலாளியாக மாறும் அவலம் தொடர்ந்து ஏற்படுகிறது. எனவே புவனகிரியில் அரசு கல்லுாரி வரும் கல்வியாண்டிலே துவங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.