ADDED : அக் 06, 2025 01:52 AM
கடலுார்:கடலுார் வெண்புறா பொது நல பேரவை சார்பில் காந்தி ஜெயந்தி விழா நடந்தது.
இதனையொட்டி நகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு பேரவை தலைவர் சண்முகம் தலைமை தாங்கி, மாலை அணிவித்தார்.
சிறப்பு தலைவர் குமார் முன்னிலை வகித்தார். விழாவில், முன்னாள் செயலார் பிரபாகரன், கஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


