ADDED : பிப் 25, 2024 04:56 AM
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் உள்ள சித்தர்கள் சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது.
நடுவீரப்பட்டு கைலாச நாதர் கோவிலில் பச்சை கேந்திர சுவாமிகள், எருக்கம்பால் சித்தர் ஆகிய சன்னதிகள் உள்ளன.
இங்கு, மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது.
நேற்று மதியம் 12:00 மணிக்கு சித்தர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மகா தீபாராதனையும் நடந்தது.
தொடர்ந்து, அமுது படைத்தல் நடந்தது.