Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தி.மு.க., கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்போம் முன்னாள் காங்., தலைவர் அழகிரி பேட்டி

தி.மு.க., கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்போம் முன்னாள் காங்., தலைவர் அழகிரி பேட்டி

தி.மு.க., கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்போம் முன்னாள் காங்., தலைவர் அழகிரி பேட்டி

தி.மு.க., கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்போம் முன்னாள் காங்., தலைவர் அழகிரி பேட்டி

ADDED : செப் 18, 2025 03:56 AM


Google News
சிதம்பரம்: ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க தி.மு.க., கூட்டணியில் வலியுறுத்துவோம் என, முன்னாள் காங்., மாநில தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் மக்கள் அமைதியாக வாழ்வதற்கு, நமது அரசமைப்பு சட்டம் தான் காரணம். வக்பு சட்ட திருத்தம் மூலமாக, அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக பிரதமர் மோடி ஒரு தீர்மானம் கொண்டு வந்து பரிசோதித்து பார்க்கிறார். அதற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளது. இது, மிகவும் வரவேற்கத்தக்கது.

உலகில் சக்திவாய்ந்த நாடுகள் தங்களுடைய மதத்திற்கு அதிகளவு மரியாதை கொடுப்பதில்லை. ஆனால் இந்தியாவில் அனைத்து மதங்களுக்கும் சம உரிமை கொடுக்கிறோம். இந்நிலையில், வக்பு வாரியத்திற்கு மட்டும் சட்ட திருத்தம் செய்வது ஏன்.

சட்ட திருத்தம், அனைத்து மதங்களுக்கும் செய்து தீர்மானம் கொண்டு வந்திருக்க வேண்டும். வக்பு வாரியத்திற்கு மட்டும் திருத்தம் கொண்டு வருவதை ஏற்க முடியாது. சுப்ரீம் கோர்ட் நமது அரசமைப்பு சட்டத்தை கடைபிடித்து, வக்பு வாரிய சட்டத்தின் சில பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து காப்பாற்றியுள்ளது என்றார்.

தேர்தல் தொடர்பாக அவர் கூறுகையில், தி.மு.க., கூட்டணியில் தொடர்ந்து பயணிப்போம். வரும் சட்டசபை தேர்தலில் சிதம்பரம் சட்டசபை தொகுதியில் காங்., கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தப்படும். அத்துடன், தமிழகத்தில் கூடுதல் இடங்களில் போட்டியிடுவோம். மேலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க கூட்டணியில் வலியுறுத்தப்படும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us