Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுார் மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை

கடலுார் மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை

கடலுார் மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை

கடலுார் மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை

ADDED : அக் 19, 2025 11:53 PM


Google News
Latest Tamil News
கடலுார்: கடலுார் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்படிக்க செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுருத்தியுள்ளது.

வடகிழக்கு பருவமழை துவங்கியதை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில், நாளை 21ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக கடலுார் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரை வரும் வரை விசைப்படகு மற்றும் நாட்டுப் படகில் சென்று கடலில் மீன்பிடிக்க செல்லக் கூடாது. கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்பி வர வேண்டு ம்.

மேலும், கடற்கரை பகுதி மற்றும் முகத்துவார பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகள், மீன்பிடி வலைகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us