ADDED : செப் 09, 2025 07:39 AM

நடுவீரப்பட்டு; சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் (எ) ராஜராஜேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு அனைத்து உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
இரவு மகா தீபாராதனை நடந்து, ராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பூஜையில் பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.