/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திருமணத்திற்கு மறுத்ததால் பெண் போலீஸ் தற்கொலை சக போலீஸ்காரர் கைது திருமணத்திற்கு மறுத்ததால் பெண் போலீஸ் தற்கொலை சக போலீஸ்காரர் கைது
திருமணத்திற்கு மறுத்ததால் பெண் போலீஸ் தற்கொலை சக போலீஸ்காரர் கைது
திருமணத்திற்கு மறுத்ததால் பெண் போலீஸ் தற்கொலை சக போலீஸ்காரர் கைது
திருமணத்திற்கு மறுத்ததால் பெண் போலீஸ் தற்கொலை சக போலீஸ்காரர் கைது
ADDED : ஜூலை 03, 2025 11:12 PM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே போலீஸ்காரர் திருமணம் செய்ய மறுத்ததால் கர்ப்பிணி பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த கொங்கராயனுாரைச் சேர்ந்தவர் சோனியா,26; இவரும் கீழ்கவரப்பட்டைச் சேர்ந்த முகிலன்,27; என்பவரும் காதலித்து கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்தனர். 6 வயதில் செஜிதா என்ற மகள் உள்ளார்.
திருமணமான 2வது ஆண்டில் சோனியா போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆவடியில் போலீஸ் ஸ்டேஷனில் பணியில் சேர்ந்தார். சோனியா தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசிக்கிறார்.
இந்நிலையில் கடந்த 1ம் தேதி, கொங்கராயனுாரில் பெற்றோர் வீட்டிற்கு வந்த சோனியா பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடன், குடும்பத்தினர் மீட்டு புதுச்சேரி ஜிப்மரில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் இறந்தார்.
இதற்கிடையே, சோனியா கடந்த 1ம் தேதி காலை 6:00 மணிக்கு 'வாட்ஸ் ஆப்' பில் தனக்கு வாக்குமூலம் கடிதம் அனுப்பியதாகவும், அதன்பிறகு மொபைலில் தொடர்பு கொண்டு மகளை நன்றாக பார்த்து கொள்ளுமாறு கூறினார்.
சந்தேகமடைந்து கொங்கராயனுார் சென்ற போது, அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் முகிலன் கூறியுள்ளார். மேலும், சோனியா அனுப்பியதாக முகிலன் போலீசில் அளித்த வாக்குமூலம் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஆவடி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் ராஜீ என்ற போலீஸ்காரருடன் பழக்கம் ஏற்பட்டது. கணவரிடம் விவாகரத்து பெற்ற பிறகு திருமணம் செய்து கொள்வதாக ராஜீ கூறியதால் நெருங்கி பழகியதில் கர்ப்பமானேன்.
இதை ராஜீயிடம் கூறிய போது கர்ப்பத்தை கலைக்கும்படி கூறியதற்கு மறுப்பு தெரிவித்தேன். இதனால் மன உளைச்சலில் இருந்தேன். அலுவலகத்திலும் கடுமையான பணிகளை கொடுத்து தொல்லை கொடுத்ததால் கர்ப்பம் கலைந்தது. வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன்.
என் மரணத்துக்கு ராஜீ தான் காரணம். எனவே, ராஜீ மற்றும் பணி அழுத்தம் கொடுத்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, முகிலன் மற்றும் அவரது உறவினர்கள் நேற்று போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். போலீசார் சமாதானம் செய்து, சோனியாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிந்து ராஜீயை கைது செய்தனர்.
டி.எஸ்.பி., ரூபன்குமார், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சோனியாவின் வீட்டுக்கு சென்று விசாரனை நடத்தினர். பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் கொங்கராயனூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.