Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுாரில் நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

கடலுாரில் நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

கடலுாரில் நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

கடலுாரில் நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

ADDED : செப் 25, 2025 03:30 AM


Google News
கடலுார் : கடலுார் மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நாளை நடக்கிறது.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு:

செப்டம்பர் மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நாளை (26ம் தேதி) கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறும்.

மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகளை தெரிவிக்க விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8.00 மணிமுதல் 10.00 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரங்களை பதிவு செய்துக்கொள்ளவேண்டும்.

மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறையின் அலுவலர்கள் உரிய பதில் அளிக்கவும், தொடர் நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் மூலம் அறிவுரை வழங்கப்படுகிறது.

மாவட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us