ADDED : ஜூன் 22, 2025 02:22 AM
பண்ருட்டி: பண்ருட்டி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் நல்லதுரை, ரவிச்சந்திரன், சேகர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச்செயலாளர் பழனிவேல், துணை தலைவர் ரங்கராஜன் கண்டன உரையாற்றினர்.
மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.