Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பள்ளி வேன் மோதி முதியவர் பலி

பள்ளி வேன் மோதி முதியவர் பலி

பள்ளி வேன் மோதி முதியவர் பலி

பள்ளி வேன் மோதி முதியவர் பலி

ADDED : மார் 24, 2025 06:00 AM


Google News
Latest Tamil News
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் கடைவீதியில் தனியார் பள்ளி வாகனம் மோதி முதியவர் இறந்தார்.

மந்தாரக்குப்பம் அடுத்த பெரியாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 80.

இவர் நேற்று காலை 11:15 மணியளவில், மந்தாரக்குப்பம் கடை வீதிக்கு வந்து பொருட்கள் வாங்கி கொண்டு சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த தனியார் பள்ளி வேன் சைக்கிள் மீது மோதியது. தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் பரிசோதித்து, அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.

விபத்து குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us