/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மீன் பிடித்த முதியவர் ஆற்றில் மூழ்கி பலி மீன் பிடித்த முதியவர் ஆற்றில் மூழ்கி பலி
மீன் பிடித்த முதியவர் ஆற்றில் மூழ்கி பலி
மீன் பிடித்த முதியவர் ஆற்றில் மூழ்கி பலி
மீன் பிடித்த முதியவர் ஆற்றில் மூழ்கி பலி
ADDED : மார் 23, 2025 04:29 AM
விருத்தாசலம் : மணிமுக்தாற்றில் மீன்பிடித்த முதியவர், ஆற்றில் மூழ்கி இறந்தார்.
விருத்தாசலம் காந்தி நகரை சேர்ந்தவர் மாதவன், 48. நேற்று மாலை 3:00 மணியளவில், பாலக்கரை மணிமுக்தாற்றில் வலைபோட்டு மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டார். இதற்காக தேங்கியிருந்த நீரில் இறங்கியபோது, மூச்சுத்திணறி மூழ்கினார்.
தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் சென்று, பொதுமக்கள் உதவியுடன் மீட்டபோது, இறந்திருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக, விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.