ADDED : ஜன 07, 2024 04:51 AM
பண்ருட்டி: வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த மேல்பட்டாம்பாக்கம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி மகள் கனிமொழி, 27; இவருக்கும் கோழிப்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் தமிழன்பன்,32; என்பவருக்கும் கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது.
இந்நிலையில், கருப்பாக இருப்பதாக கூறி கூடுதலாக 10 சவரன் நகை வரதட்சணை கேட்டு கனிமொழியை, அவரது கணவர் தமிழன்பன், மாமனார் வெங்கடேசன், மாமியார் மணிமேகலை, நாத்தனார் தமிழரசி ஆகியோரும் கொடுமைப்படுத்தி வந்தனர்.இதுகுறித்து கனிமொழி அளித்த புகாரின்பேரில், பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, தமிழன்பன் உள்ளிட்ட 4 பேரை தேடிவருகின்றனர்.