Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கொரோனாவால் அச்சம் வேண்டாம் நுரையீரல் சிகிச்சை நிபுணர் அறிவுரை

கொரோனாவால் அச்சம் வேண்டாம் நுரையீரல் சிகிச்சை நிபுணர் அறிவுரை

கொரோனாவால் அச்சம் வேண்டாம் நுரையீரல் சிகிச்சை நிபுணர் அறிவுரை

கொரோனாவால் அச்சம் வேண்டாம் நுரையீரல் சிகிச்சை நிபுணர் அறிவுரை

ADDED : ஜூன் 01, 2025 04:17 AM


Google News
Latest Tamil News
கடலுார்: கொரோனா வைரசால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என, கடலுார் கோவன்ஸ் நுரையீரல் சிறப்பு சிகிச்சை மைய டாக்டர் கலைக்கோவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்பு மிக குறைந்த அளவில் உள்ளது. தமிழகத்தில் கோடைக்காலத்தில் பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால், வைரசின் பரவல் வீரியமாகி அதிகளவில் பரவுகிறது. விடுமுறைக்காலம் என்பதால் பொதுமக்கள் அதிகளவில் சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு அம்சம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவில் கூடுவதால் பரவல் அதிகரிக்க நேரிடும். ஆகையால் சிறுநீரக தொற்று, இருதய நோய், சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.

பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். தொற்று பரவாமல் தடுக்க பொது இடங்களில் பொதுமக்கள் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். நீர் பழங்கள், நீர் காய்கறிகளை சிறிது காலம் தவிர்ப்பது நன்மையை ஏற்படுத்தும். கொரோனா வைரசால் மக்கள் அச்சப்பட்ட வேண்டாம் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us