/உள்ளூர் செய்திகள்/கடலூர்/போகியில் பழைய பொருட்களை எரிக்க வேண்டாம்: கலெக்டர்போகியில் பழைய பொருட்களை எரிக்க வேண்டாம்: கலெக்டர்
போகியில் பழைய பொருட்களை எரிக்க வேண்டாம்: கலெக்டர்
போகியில் பழைய பொருட்களை எரிக்க வேண்டாம்: கலெக்டர்
போகியில் பழைய பொருட்களை எரிக்க வேண்டாம்: கலெக்டர்
ADDED : ஜன 07, 2024 05:46 AM
கடலுார்; போகி பண்டிகையில், பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்குமாறு கலெக்டர் அருண்தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை முன்னோர்கள் கொண்டாடி வந்துள்ளனர்.
ஆனால், தற்பொழுது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிக்கின்றனர். இதனால், காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
வாகன ஒட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. எனவே, போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.