ADDED : செப் 11, 2025 11:20 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் பூதாமூர் தனியார் மண்டபத்தில், 23வது வார்டு நகர தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.
அவைத்தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தண்டபாணி, நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தனர். நகர இளைஞரணி துணை அமைப்பாளர் குமார் வரவேற்றார்.
விருத்தாசலம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் குலோத்துங்கன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், பொது உறுப்பினர் சேர்க்கை, சட்டசபை தேர்தலில் சிறப்பாக பணியாற்றுவது குறித்து அறிவுறுத்தப்பட்டது.
நகர துணை செயலாளர்கள் ராமு, நம்பிராஜன், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ், பொருளாளர் மணிகண்டன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சதீஷ்குமார், நகர மாணவரணி கிருஷ்ணராஜ், குமார், மாவட்ட பிரதிநிதி சரவணன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அசோக்குமார், முத்துக்குமார், நிஷாந்த் , 12வது வார்டு கவுன்சிலர் மணிவண்ணன் பங்கேற்றனர். 23வது வார்டு செயலர் பழனிவேல் நன்றி கூறினார்.
இதேபோல், 12வது வார்டிலும் நகர பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.