Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரயில்வே ஸ்டேஷனில் கோட்ட மேலாளர் ஆய்வு

ரயில்வே ஸ்டேஷனில் கோட்ட மேலாளர் ஆய்வு

ரயில்வே ஸ்டேஷனில் கோட்ட மேலாளர் ஆய்வு

ரயில்வே ஸ்டேஷனில் கோட்ட மேலாளர் ஆய்வு

ADDED : செப் 13, 2025 09:06 AM


Google News
Latest Tamil News
பண்ருட்டி : பண்ருட்டி ரயில்வே ஸ்டேஷனில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பாலக்ராம்நேகி ஆய்வு செய்தார்.

திருச்சி தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் பாலக்ராம்நேகி நேற்று சிறப்பு ரயில் மூலமாக பண்ருட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு வருகை தந்தார்.

அப்போது, நடைபாதை புதுப்பித்தல் பணியை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்கவும், தரமாகவும் முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பின், அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து, பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இவரிடம், பி.ஆர்.டி., ரயில் உபயோகிப்பாளர்கள் நலச்சங்க தலைவர் சுபாஷ், துணைத் தலைவர் அருணாசலம், செயலாளர் விஜயகுமார் ஆகியோர் 'பண்ருட்டி ரயில்வே ஸ்டேஷனில் திருப்பதி, உழவன் உள்ளிட்ட ரயில்கள் நின்று செல்ல' நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மனு அளித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us