Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நெல்லிக்குப்பத்தில் டி.ஐ.ஜி., திடீர் ஆய்வு

நெல்லிக்குப்பத்தில் டி.ஐ.ஜி., திடீர் ஆய்வு

நெல்லிக்குப்பத்தில் டி.ஐ.ஜி., திடீர் ஆய்வு

நெல்லிக்குப்பத்தில் டி.ஐ.ஜி., திடீர் ஆய்வு

ADDED : மார் 25, 2025 06:50 AM


Google News
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி., நிஷாமிட்டல் நேற்று திடீரென ஆய்வு செய்தார்.

போலீஸ் நிலையத்தை துாய்மையாக பராமரிக்கபடுகிறதா, கைதிகள் அறை எப்படி உள்ளது, துப்பாக்கிகள் முறையாக பாதுகாக்கப்படுகிறதா என, ஆய்வு செய்தார். அப்போது, புகார் கொடுக்க வருபவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். அலைகழிக்க கூடாது. அவர்கள் பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும். நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்.

கோர்ட்டில் ஆஜராகாமல் உள்ள குற்றவாளிகளை பிடித்து ஆஜர் படுத்த வேண்டும். சாராயம், கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும். திருட்டு நடப்பதை தடுக்க வேண்டும். வழக்குகளில் சம்பந்தபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய போலீசாருக்கு டி.ஐ.ஜி., நிஷாமிட்டல் அறிவறுத்தினார்.

டி.எஸ்.பி., ராஜா, இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us