Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நர்த்தன விநாயகரை தரிசிக்க பக்தர்கள் திரண்டனர்

நர்த்தன விநாயகரை தரிசிக்க பக்தர்கள் திரண்டனர்

நர்த்தன விநாயகரை தரிசிக்க பக்தர்கள் திரண்டனர்

நர்த்தன விநாயகரை தரிசிக்க பக்தர்கள் திரண்டனர்

ADDED : ஜன 16, 2024 06:34 AM


Google News
Latest Tamil News
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அருள்பாலிக்கும், நர்த்தன விநாயகரை தரிசிக்க, பக்தர்கள் திரண்டனர்.

நடுவீரப்பட்டு அருகே சி.என்.பாளையத்தில் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, நேற்று பொங்கல் திருநாளை முன்னிட்டு விநாயகர்,ராஜராஜேஸ்வரர் உள்ளிட்ட மூலவர் மற்றும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் உற்சவர் நர்த்தன விநாயகர் ஆகியோருக்கு, காலை 6:00 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

தொடர்ந்து 7:30 மணிக்கு நர்த்தன விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் ஆலய உலாவாக நடனம் ஆடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனை தரிசிக்க பக்தர்கள் அதிக அளவில் கோவிலில் குவிந்தனர்.

ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us