ADDED : செப் 24, 2025 08:43 AM
நடுவீரப்பட்டு : மகளை காணவில்லை என, தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த சன்னியாசிப்பேட்டையைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகள் சுவாதி,19; கரூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு மாணவி. கடந்த 18ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாய் சுவாதி அளித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.