/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குளத்தில் சிக்கிய முதலை சிதம்பரம் அருகே பரபரப்பு குளத்தில் சிக்கிய முதலை சிதம்பரம் அருகே பரபரப்பு
குளத்தில் சிக்கிய முதலை சிதம்பரம் அருகே பரபரப்பு
குளத்தில் சிக்கிய முதலை சிதம்பரம் அருகே பரபரப்பு
குளத்தில் சிக்கிய முதலை சிதம்பரம் அருகே பரபரப்பு
ADDED : ஜூன் 30, 2025 03:08 AM

சிதம்பரம் : சிதம்பரம் அருகே குளத்தில் மீன் பிடிக்கும் போது, வலையில் சிக்கிய முதலையை வனத்துறையினர் மீட்டு பாதுகாப்பாக விட்டனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் முதலைகளை காண்பது சாதாரணமாக விஷயமாகும். முதலைகளால், கால்நடைகள் மட்டுமின்றி மனிதர்களும் கடிபடும் அவலம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அவ்வப்போது, வாய்க்கால், குளம் மற்றும் வீடுகளுக்குள் புகும் முதலைகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில். சிதம்பரம் அடுத்த தெம்மூர் கிராமத்தில், மாதா கோவில் அருகே உள்ள பொது குளத்தில் நேற்று, அப்பகுதியை சேர்ந்த சிலர் மீன் பிடிக்க வலை விரித்தனர். அப்போது, மீன்பிடி வலையில் முதலை ஒன்று சிக்கியது. முதலையை கரைக்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து கிராம மக்கள் சிதம்பரம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், வனச்சரகர் பன்னீர்செல்வம் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர்கள் விரைந்து சென்று முதலையை மீட்டு, வக்காரமாரி குளத்தில் பாதுகாப்பாக விட்டனர்.