ADDED : செப் 12, 2025 05:08 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த கோழிப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 33 ஆண்டுகளுக்கு முன் தலைமை ஆசிரியராக சுப்புராயலு பணிபுரிந்தார். இவருடன் ஆசிரியர்களாக விஜயா, சரளாதேவி, சாமிப்பிள்ளை, குயின் எலிசபெத், செல்வராஜ், ராமானுஜம் ஆகியோர் பணியாற்றினர்.
33 ஆண்டுக்கு முன் இவர்களிடம் 10ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் 20க்கும் மேற்பட்டோர் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று வாழ்த்து பெற்றனர்.