Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு

பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு

பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு

பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு

ADDED : மே 15, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பொதுத் தேர்வில்சாதனைப் படைத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில், பள்ளி அளவில் மாணவர் சிவக்குமார் 515 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவர் அப்துல் ஹபிஸ், 514 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி அமிர்தவர்ஷினி, 510 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.

10க்கும் மேற்பட்ட மாணவர்கள் 450க்கு மேல் மதிப்பெண் பெற்றனர். சாதனை படைத்த மாணவர்களுக்குபாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.

உதவி தலைமை ஆசிரியர் விமல்ராம் வரவேற்றார். சாதனை மாணவர்களுக்கு செந்தில்குமார், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சாந்தினி ஆகியோர் பரிசு வழங்கினர்.

விழாவில் ஆசிரியர்கள் ஞானபிரகாசம், கார்த்திகேயன், பாலசுப்பிரமணியன், மஞ்சுளா, இலக்கியா, சமூக ஆர்வலர் சுந்தமூர்த்தி, முன்னாள் மாணவர் ராகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us