Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாணவர்கள் கோல்ப் பயிற்சி நெய்வேலியில் கலெக்டர் ஆய்வு 

மாணவர்கள் கோல்ப் பயிற்சி நெய்வேலியில் கலெக்டர் ஆய்வு 

மாணவர்கள் கோல்ப் பயிற்சி நெய்வேலியில் கலெக்டர் ஆய்வு 

மாணவர்கள் கோல்ப் பயிற்சி நெய்வேலியில் கலெக்டர் ஆய்வு 

ADDED : மே 30, 2025 05:52 AM


Google News
Latest Tamil News
கடலுார்: நெய்வேலி என்.எல்.சி., நிறுவனத்தின் கோல்ப் மைதானத்தில் அரசு பள்ளி மாணவர்கள் பெறும் பயிற்சி வகுப்பை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.

கடலுார் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித் துறை சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் திறன் மேம்படுத்தும் வகையில் 'கோடை கற்றல் கொண்டாட்டம் திட்டத்தின் கீழ் ஆங்கிலம் பேச்சு பயிற்சி, புகைப்படம் மற்றும் டிஜிட்டல் கலை பயிற்சி, பிரெஞ்சு மொழி பயிற்சி, அடுமனை, மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி பயிற்சிகள், சதுரங்க விளையாட்டு உட்பட 20 பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம் கோல்ப் மைதானத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கோல்ப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு அரசு பள்ளிகளை சேர்ந்த 30 மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுகின்றனர்.

மாணவர்கள் பெறுவதை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்து, மாணவர்களின் திறன்கள் குறித்து கேட்டறிந்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன், என்.எல்.சி., நிர்வாக அலுவலர்கள், பயிற்சியாளர்கள் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us