ADDED : பிப் 11, 2024 03:08 AM

சிதம்பரம்: மாவட்ட அளவிலான ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற வீனஸ் பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி கடலுாரில் நடந்தது. இதில், சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 9 ம் வகுப்பு மாணவி சந்திரபாவனா மூன்றாமிடம் பிடித்தார். அவருக்கு, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், ரூ. 2 ஆயிரம் ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். வெற்றி பெற்ற மாணவி சந்திரபாவனாவை வீனஸ் குழுமப் பள்ளிகளின் நிறுவனர் குமார், முதல்வர் ரூபியால் ராணி பாராட்டினர்.
கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, துணை முதல்வர் அறிவழகன் உடன் இருந்தனர்.