ADDED : செப் 09, 2025 06:28 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த சின்னகண்டியங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பாரத் ராஜா மனைவி மீனா, 30; காணாதுகண்டான் கிராமத்தைச் சேர்ந்த இவரது தம்பி உதயகுமார், 29; இருவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது.
நேற்று முன்தினம் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில், ஆத்திர மடைந்த உதயகுமார், மீனாவை திட்டி தாக்கினார்.
விருத்தாசலம் போலீசார், உதயகுமார் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.