ADDED : செப் 16, 2025 11:57 PM
விருத்தாசலம்; வாலிபரை தாக்கிய முதியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விருத்தாசலம் அடுத்த பட் டிகுடிகாடு பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி மகன் செல்வா, 29; புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 35; இவரது இட்லி மாவு கடையில் செல்வா வேலை செய்து வருகிறார்.
ராஜ்குமாருக்கும், அவரது மாமனார் குணசேகரனுக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் ராஜ்குமார் வெளியூர் சென்றிருந்ததால், செல்வா இட்லி மாவு கடையை திறந்தார். அப்போது, அங்கு வந்த குணசேகரன், 56; கடையை திறக்ககூடாது என செல்வாவை தாக்கினார்.
புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் குணசேகரன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.