குட்கா பதுக்கல் ஒருவர் மீது வழக்கு
குட்கா பதுக்கல் ஒருவர் மீது வழக்கு
குட்கா பதுக்கல் ஒருவர் மீது வழக்கு
ADDED : மே 10, 2025 12:31 AM
வடலுார்: குட்கா பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
வடலுார் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ஆர்.கே. நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள வீடு ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் விற்பனைக்கு பதுக்கியது தெரிந்தது.
இது தொடர்பாக ஆர்.கே. நகரை சேர்ந்த பிரகாஷ், 35, என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து 3,000 ரூபாய் மதிப்புள்ள 375 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.