Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மனைவியிடம் குழந்தையை தர மறுப்பு கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு

மனைவியிடம் குழந்தையை தர மறுப்பு கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு

மனைவியிடம் குழந்தையை தர மறுப்பு கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு

மனைவியிடம் குழந்தையை தர மறுப்பு கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு

ADDED : ஜன 11, 2024 11:47 PM


Google News
கடலுார்: மனைவியிடம் குழந்தையை தர மறுத்து, வீட்டை விட்டு துறத்திய கணவர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

கடலுார், செம்மண்டலத்தைச் சேர்ந்தவர் திருசெல்வன். கப்பலில் வேலை செய்கிறார். இவரது மனைவி கார்த்திகா, 32; திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் கார்த்திகாவை திருசெல்வன் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தி வந்துள்ளனர்.

இதற்கிடையே, கடந்த ஆகஸ்டு மாதம் கார்த்திகாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தையை கார்த்திகாவிடம், கணவர் உட்பட குடும்பத்தார் தர மறுத்தனர். தட்டிக் கேட்ட அவரை திருசெல்வன் உள்ளிட்டோர் தாக்கி துன்புறுத்தியுதுடன், வீட்டை விட்டு துறத்தியுள்ளனர்.

இதுகுறித்து கார்த்திகா அளித்த புகாரின் பேரில், கடலுார் அனைத்து மகளிர் போலீசார், கணவர் திருச்செல்வன், இவரது தாய் பவுனாம்பாள் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us